1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 9 அக்டோபர் 2021 (18:07 IST)

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவு!

சென்னையில் இந்த ஆண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கையில் இரண்டு சுற்றுக் கலந்தாய்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 72 கல்லூரிகளில் இதுவரை ஒரு மாணவர் கூட சேரவில்லை என தெரிய வந்துள்ளது.

நடப்பு ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக ஆன்லைன் மூலமாக நடந்து வருகிறது.

சிறப்பு பிரிவு கலந்தாய்வு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான இரண்டு சுற்றுக் கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், சுமார் 72 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை எனவும் 131 பொறியியல் கல்லூரிகளில் ஒரு விழுக்காட்டிற்குக் கீழ் மாணவர் சேர்க்கை நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

 கல்வியாளர் அஸ்வின் மேற்கொண்ட இந்த ஆய்வில் தமிழ்கத்தி உள்ள பொறியியல் கல்லூரிகளில் பொறியல் மாணவர்களின் சேர்க்க குறைந்துள்ளது மாணவர்களுக்கு இப்படிப்பின் மீதான ஆர்வம் குறைந்துள்ளதைக் காட்டுகிறதோ எனக் கேள்வி எழுந்துள்ளது.