1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 30 அக்டோபர் 2021 (20:28 IST)

நீட் தேர்வு எழுதிய மாணவர் தற்கொலை!

இந்தியாவில் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான மருத்துவ நுழைவுத்தேர்வு சமீபத்தில் நாடு முழுவதும் நடதப்பட்டது. இதில், லட்சக்கணக்கான மாணவர்கள் அனைத்து மாநிலங்களில் இருந்தும்  கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவைச் சேர்ந்த கீர்த்தி வாசன் என்ற மாணவர் நீட் தேர்வில் தோற்று விடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 20 ஆகும்.