வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : வியாழன், 1 ஜூலை 2021 (17:36 IST)

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை !

கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரொனா பரவியது. இதையடுத்து  மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.

எனவே நாட்டிலுள்ள கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக கற்பித்தல் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், 10 ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில்  பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் மாணவர் சேர்க்கை மாணவர்களின் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சர் பொன்முடி,  12 ஆம் மதிப்பெண் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கும் எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.