1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 11 ஆகஸ்ட் 2021 (08:31 IST)

ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்தர்கள் இன்றி நடந்த தேரோட்டம்!

ஒவ்வொரு ஆடி பூரம் திருவிழா நாளின்போதும் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம் என்பதும் இந்த தேரோட்டத்தின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டது
 
விருதுநகர் மாவட்டத்திற்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று ஆடிப்பூர திருநாள் கொண்டாடப்படும் நிலையில் கொரோனா காரணமாக பக்தர்களுக்கு தேரோட்டத்தில் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பக்தர்கள் இன்று தங்கத்தேர் நிறுத்தப்பட்டு வருகிறது. இந்த தேரோட்டத்தில் கோவில் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் பணியிலும் ஆடிபூரம் திருநாள் கொண்டாடப் பட்டது என்பதும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆடிப்பூரத் திருநாளில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்காதது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் கொ0ரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது