1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Special train for Athivarathar devotees

அத்திவரதர் பக்தர்களுக்கு ஓர் இனிய செய்தி…

அத்திவரதர்
அத்திவரதரின் தரிசனத்தை பெற சென்னையிலிருந்து காஞ்சிபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஜுலை 1 ஆம் தேதியிலிருந்து அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சித் தந்து வருகிறார். இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருகை புரிகிறார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது, அத்திவரதரை தரிசிக்க சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதாவது, செங்கல்பட்டு- காஞ்சிபுரம் இடையே மாலை 5.30 மணிக்கும், காஞ்சிபுரம்- சென்னை கடற்கரை இடையே இரவு 7.45 மணிக்கும் இயக்கப்பட்ட சிறப்பு மின்சார ரயில் ரத்து செய்யப்படும் எனவும், அதற்கு பதிலாக செங்கல்பட்டு-கடற்கரை இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டிலிருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் எனவும் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்!!