1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. H.Raja gets trolled for wrong photo and comment posting in twitter

அடேய் அரைபோதை அட்மினே.. திருந்த மாட்டியா? எச்.ராஜாவுக்கு அர்ச்சனை துவங்கியது!

எச்.ராஜா
வழக்கம் போல் எச்.ராஜா தேவையில்லாமல ஒரு டிவிட் போட்டு அதற்கு இணையவாசிகளிடம் திட்டு வாங்கி வருகிறார். 
 
பாஜகவின் முத்த தலைவர் எச்.ராஜா, கி.வீரமணியை வம்புக்கு இழுந்த்து ஒரு கேள்வி எழுப்பி ட்வீட் போட்டுள்ளார். ஒரு புடைப்படத்தை வெளியிட்டு பெரியார் மய்யத்தில் மும்மொழி கொள்கை ஏற்கப்பட்டுள்ளதா? திக-வினருக்கே வேலை கொடுத்துவிட்டாரா வீரமணி? தார் சட்டியோடு எப்போது கிளம்பப்போகிறார்கள்? என்று கேள்வி எழுப்பி உள்ளார். 
 
வீரமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் இதற்கு எந்த பதிலடியும் கொடுக்காத நிலையில் இணையவாசிகள் எச்.ராஜாவிற்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அதாவது அந்த புகைப்படம் உண்மையில் வீரமணி மெயின்டெய்ன் பண்ணும் அலுவலகம் இல்லை. டெல்லியில் இருக்கும் கல்லூரி. 
எனவேதான் தப்பாக பதிவு போட்ட எச்.ராஜாவை கிண்டலடித்து வருகின்றனர். அதில் சில பதிவுகள் பின்வருமாறு... 
 
1. சார்.. இது ஒரு கல்லூரி. இது இருப்பது புது டெல்லியில். யாரும் நோட் பண்ணுவதற்குள் டுவீட்டை டெலீட் செய்யவும். 
2. அடேய் அரைபோதை அட்மினே.!? டெல்லியில் உள்ள அலுவலகம்டா.!? திருந்த மாட்டியா?
3. இது டெல்லில இருக்கிற காலேஜ்... போ போய் வீட்ல... யாராவது பெரியவா... இருந்தா கூட்டிட்டு வா..
4. புத்தி சுவாதீனம் இல்லாம பேசுறீங்க. டெல்லியில் இருக்கேன்னு மரியாதை கொடுத்து மூணாவது இடத்துல இந்தியில் பெயர் எழுதினா ரொம்மதான். நீங்க தார்சட்டி எடுத்துட்டு போய் அழிங்க 
5. முதல் முறையாக ஈ.வெ.ரா நாயக்கர் என்று சொல்லாமல் பெரியார் என்று சொல்லுகிறார் திரு.H.ராஜா இது மனமாற்றமா இல்ல பயமா?
அடுத்த கட்டுரையில்
அத்திவரதர் பக்தர்களுக்கு ஓர் இனிய செய்தி…