தொடர்புடைய செய்திகள்
- செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!
- நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவு.. இன்று நேரில் ஆஜராகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!
- அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 28 வரை காவல் நீட்டிப்பு.. சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!
- அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு..!
- சிறப்பு நீதிமன்றத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு மாற்றம்: அதிரடி உத்தரவு..!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை திருப்பி அனுப்பிய சிறப்பு நீதிமன்றம்: என்ன காரணம்?
அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்த நிலையில் அந்த ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கைது செய்த நிலையில் தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று அவருடைய காவல் முடிவடைந்ததை அடுத்து நேரில் ஆஜர் செய்யப்பட்டார். இதனை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் ஜாமின் மனு கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது
அவசர வழக்காக இந்த ஜாமின் மனுவை விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்தார். ஆனால் இந்த ஜாமின் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என சிறப்பு நீதிமன்றம் நேற்று அந்த ஜாமீன் மனுவை திருப்பி அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
Edited by Mahendran
