தொடர்புடைய செய்திகள்
- கள்ள மது விற்று, கப்பம் கட்டிய செந்தில் பாலாஜி,ஸ்டாலின் அவர்களுக்கு செயல் வீரராம்-எடப்பாடி பழனிசாமி
- திமுக பிரமுகருக்கு சொந்தமான இடத்தில் போலி மது ஆலை.. திருச்செங்கோடு பகுதியில் 5 பேர் கைது
- ஜாபர் சாதிக்கு உட்பட 5 பேரின் காவல் நீட்டிப்பு..! ஏப்.16 வரை நீட்டித்து உத்தரவு..!
- செந்தில் பாலாஜி ஜாமீன் மனு..! ED பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!!
- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்; நீதிமன்றம் உத்தரவு
செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு.. 31வது முறையாக நீட்டித்து உத்தரவு..!!
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 31-ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்திருந்தனர். 3,000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனால் புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் நீதிபதி அல்லி முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன்மூலம் 31 ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
