தொடர்புடைய செய்திகள்
- எந்த தமிழனும் மண்டியிட்டதில்லை… ஆனா முதல்வர்..? – ராகுல்காந்தி விமர்சனம்!
- அத்துமீறி பேசிய ஆ.ராசா! ஆத்திரமடைந்த அதிமுகவினர்! – எடப்பாடியில் கருப்பு கொடி போராட்டம்!
- உயிரை விட்றாதீங்க.. இருந்து வேடிக்கை பாருங்க! – எடப்பாடியாருக்கு ஸ்டாலின் பதில்!
- மதுரையில் மாடுகள் மீது ஆசிட் வீச்சு! – மர்ம நபர்களை பிடிக்க கோரிக்கை!
- ”தாமரை மலரவே மலராது”, நமீதா கூட்டத்தில் கோஷம்! – இளைஞருக்கு அடி, உதை!
ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காத..! – பாடி வாக்கு சேகரிக்கும் சீமான்!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் பாட்டு பாடி ஓட்டு சேகரிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் நாம் தமிழர் கட்சி கூட்டணியின்றி அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் கட்சி வேட்பாளர்களுக்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொகுதி வாரியாக பயணித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
அவ்வாறாக அண்மையில் பிரச்சாரம் ஒன்றில் சீமான் பாடிய பாடல் வைரலாகியுள்ளது. மம்பட்டியான் திரைப்படத்தில் வரும் பாடலை வரிகள் மாற்றி “ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காத” என அவர் பாடியுள்ள பாடலை அவரது ட்விட்டர் பக்கத்திலேயே பதிவேற்றியுள்ளார். இந்த பாடல் நாம் தமிழர் கட்சியினரிடையே வைரலாகி வருகிறது.
ஓட்டு போட போற பொண்ணே ஒதுங்கி நிக்காத..
— சீமான் (@SeemanOfficial) March 28, 2021
கண்ட கண்ட சின்னங்கண்டு கலங்கி நிக்காத..
உழைக்கும் மக்கள் சின்னம் அது விவசாயி சின்னம்..
நாள் தோறும் பாடுபட்டோம்.. ஆனாலும் துன்பப்பட்டோம்..
யார் யாருக்கோ ஓட்ட போட்டோம்.. ஓட்டாண்டி ஆகி புட்டோம்..
இந்த நில மாற நான் வேற என்ன கூற.. #விவசாயி pic.twitter.com/14P5LEqBv9
அடுத்த கட்டுரையில்
