தொடர்புடைய செய்திகள்
- அனுமதி கடிதம் இருந்தால் பள்ளி செல்லலாம்! – பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு!
- பள்ளிகளுக்கு வேண்டுகோள் விடுத்த பிரபல நடிகர் : மாணவர்கள் நெகிழ்ச்சி
- தமிழகத்தை அடுத்து புதுவையிலும் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு!
- அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள்… கண்டிப்பாக இதைக் கொண்டுவரவேண்டுமாம்!
- பாடங்களில் சந்தேகமா? அழையுங்கள் 14474... செங்கோட்டையன் அறிவிப்பு!
அக். 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்ற அரசாணை நிறுத்தி வைப்பு!
தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கும் என்று தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. இந்த நிலையில் தற்போது திடீரென 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்று அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
10,11,12 வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வி துறை கடந்த 24ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையை நிறுத்தி வைத்துள்ளதாக தமிழக அரசு இன்று தெரிவித்துள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மாணவர்களின் நலன் கருதி பெற்றோர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின் மருத்துவ குழுவினர்களுடன் ஆலோசனை செய்த பின்பு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்
எனவே அக்டோபர் 1 முதல் பள்ளிகள் திறப்பு என்ற அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள் வரும் 1ஆம் தேதி திறக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
