1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 4 ஜூலை 2022 (14:53 IST)

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் மனு தள்ளுபடி

sathankulam
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் பகுதியில் உள்ள தந்தை மகன் ஆகிய இருவரும் விசாரணைக்கு காவல்துறையினர் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அடித்துக் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது
 
இதுகுறித்து காவல்துறையினர் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணையில் மதுரை உயர்நீதிமன்ற நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் சாத்தான்குளம் வழக்கில் சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதரன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவருடைய ஜாமின் மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.