தொடர்புடைய செய்திகள்
- உள்ளூர் போட்டிகளை தொடங்க பிசிசிஐ திட்டம்? பரபரப்பு தகவல்
- மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு! சென்னையை அடுத்து செங்கல்பட்டு!
- தமிழகத்தில் இன்று 5994 பேர் கொரோனாவால் பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?
- ஜெகத்ரட்சகன் பிரதமரை தனிமையில் சந்தித்தாரா? சமூகவலைதளங்களில் பரவும் செய்தி!
- அரசியலுக்கு வராமல் நல்லது செய்வது சாத்தியமே – ரஜினி சிஷ்யர் திடீர் அறிவிப்பு!
சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் கொரோனாவால் மரணம்
சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் கொரோனாவால் மரணம்
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் 10 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர் என்பது தெரிந்ததே. இவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வந்தனர்
இந்த நிலையில் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பால்துரை சற்றுமுன் சிகிச்சை பலனின்றி பலியானதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தது குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
அடுத்த கட்டுரையில்
