1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (14:17 IST)

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு: அதிமுக தோல்வி குறித்து சசிகலா!

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என அதிமுகவின் தோல்வி குறித்து சசிகலா கருத்து தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆகியவைகளில் அதிமுக தொடர் தோல்விகளை பெற்று வருகிறது 
 
இந்த நிலையில் 50 ஆண்டுகால வரலாற்றில் அதிமுக இதுபோன்ற தொடர் தோல்விகளை கண்டதில்லை என்றும் விதைத்தவர்கள் வளர்த்தவர்களை மறந்ததன் விளைவே இந்த தோல்விக்கு காரணம் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்றும் இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு என்பதை அதிமுகவினர் உணர வேண்டும் என்றும் சசிகலா கூறியுள்ளார். தொடர் தோல்விக்கு பிறகு அதிமுக மீண்டும் சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்வது குறித்து ஆலோசிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்