1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sasikala and family properties captured by IT

சசிகலா & கோ வின் 1600 கோடி சொத்து – வருமானவரித்துறை முடக்கம் !

சசிகலா
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் 1600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு  2017ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளாக சிறையில் உள்ள சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் ரூ.1600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பினாமி பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வருமான வரித் துறை அதிகாரிகளால் தற்காலிகமாக முடக்கப்பட்டிருப்பதாக தி இந்து நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சொத்துகள் அனைத்தும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு வாங்கப்பட்டவை என சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
உருவாகிறது புயல்; அசுர வேகத்தில் வீசும் காற்று: வானிலை மையம் வார்னிங்!