தொடர்புடைய செய்திகள்
- ஊட்டி போறீங்களா? இந்த ரூட்ல போகாதீங்க! – போக்குவரத்தில் திடீர் மாற்றம்!
- சிதம்பரம் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து வழக்கு: நீதிமன்றம் முக்கிய உத்தரவு
- வாட்ஸ் அப் மூலம் வழக்கின் விசாரணை விவரங்கள்.. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்..!
- பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு..! வரும் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.!!
- அனுபமாவின் 100 கோடி ரூபாய் வசூல் டில்லு ஸ்கொயர் இன்று முதல் ஓடிடியில்!
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு..! சிபிசிஐடிக்கு மாற்றம்.! டிஜிபி உத்தரவு..!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் கடந்த ஆறாம் தேதி இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பணம் பறிமுதல் செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
