1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (19:15 IST)

திமுகவுக்கு பிரச்சாரம் செய்த வெளிநாட்டவருக்கு நோட்டீஸ்!

திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த வெளிநாட்டு நபருக்கு அவருடைய நாட்டின் தூதரகத்தில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கோவையில் திமுகவுக்கு ஆதரவாக ரோமானியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் பிரச்சாரம் செய்தார். அவருக்கு உள்ளூர் திமுக பிரமுகர் ஒருவர் பிரச்சார ஏற்பாடுகளை செய்ததாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் தொழில்முறையாக விசா வாங்கி வந்த ஸ்டீபன் என்ற அந்த நபர் அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்தது விதிகளை மீறும் செயல் என்றும் எனவே இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ரோமெனிய தூதரகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது
 
இந்த நோட்டீசுக்கு அவர் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார்,ம் அவருக்கு ஆதரவளித்த திமுக என்ன விளக்கம் கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்