1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Result will be immediately announced says EC

சூட்டோடு சூடாக ரிசல்ட்: தேர்தல் ஆணையம் உத்தரவு!

தமிழகம்
வாக்கு எண்ணிக்கை முறையாக முடிந்த பின் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவு. 
 
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலின் முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தேர்தலில் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். இதை தொடர்ந்து வரும் 12 ஆம் தேதி (நாளை) வாக்குகள் எண்ணப்படுகிறது.  அன்றைய தினம் காலை 8 மணிக்கு 74 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 
 
இந்நிலையில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முறையாக முடிந்த பின் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் உரிய அடையாள அட்டையின்றி யாரும் இருக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
ஜம்மு- காஷ்மீரில் 5 ராணுவ வீரர்கள் பலி!