தொடர்புடைய செய்திகள்
- தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு! – டிஎன்பிஎஸ்சிக்கு நீதிமன்றம் உத்தரவு!
- மதுசூதனனை சந்திக்க சென்ற சசிக்கலா; உள்ளே இருந்த எடப்பாடியார்!
- மூன்றாம் அலை எச்சரிக்கை; டோரா, மிக்கி மவுஸுடன் குழந்தைகள் வார்டுகள்!
- கோவிஷீல்டு வேணாம்.. கோவை ஷீல்டுதான் வேணும்! – அறிவிப்பு பலகையை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
- சிறுமிக்கு 2 திருமணம்; கணவன், காதலன் உட்பட குடும்பமே சிறையில்..! – பவானியில் பரபரப்பு!
பொறியியல் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு! – முதல்வரிடம் அறிக்கை!
தமிழகத்தில் பொறியியல் மற்றும் தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்த அறிக்கை முதல்வரிடம் அளிக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்தது முதல் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பட்டப்படிப்புகளில், வேலை வாய்ப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பொறியியல் மற்றும் தொழிற் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் இன்று ஆய்வு அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கின்றனர். அதை தொடர்ந்து விரைவில் உள் ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
