வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 ஜூலை 2021 (15:44 IST)

பொறியியல் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு! – முதல்வரிடம் அறிக்கை!

தமிழகத்தில் பொறியியல் மற்றும் தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்த அறிக்கை முதல்வரிடம் அளிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்தது முதல் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பட்டப்படிப்புகளில், வேலை வாய்ப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பொறியியல் மற்றும் தொழிற் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் இன்று ஆய்வு அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கின்றனர். அதை தொடர்ந்து விரைவில் உள் ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.