1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (14:23 IST)

ஓ.பி.எஸ் அமைதி காத்தது பெரிய விஷயம்: அரசியல் பார்வையாளர் ரவீந்திரன் துரைசாமி

ops
தர்மர் ஆக இருந்து ஓபிஎஸ் அமைதி காத்தது பெரிய விஷயம் என அரசியல் பார்வையாளர் துரைசாமி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எந்தவித பிரச்சனையும் செய்யாமல் ஓபிஎஸ் அமைதி காத்து அதே நேரத்தில் தனது காரியத்தை சாதித்துக் கொண்டார்
 
இந்த நிலையில் ஓபிஎஸ் அவர்களின் அணுகுமுறை குறித்து பிரபல அரசியல் பார்வையாளர் ரவீந்திரன் துரைசாமி கூறியபோது ’இந்த அளவுக்கு தர்ம சங்கடத்திற்கு உள்ளான சூழ்நிலையிலும் தர்மராக நின்று ஓபிஎஸ் அமைதி காத்தது பெரிய விஷயம் என்று கூறினார் 
 
மேலும் நாகரீகமற்ற முறையில் ஓபிஎஸ் அவமானப்பட்டு உள்ளார் என்றும் இது தொண்டர்களுக்கு அவர் மீதுள்ள பற்றை அதிகரிக்கத்தான் செய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்