1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (10:50 IST)

தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு! – தலைமை ஹாஜி அறிவிப்பு!

இஸ்லாமிய புனித பண்டிகையான ரமலான் மே மாதம் கொண்டாடப்படும் நிலையில் நாளை நோன்பு தொடங்க உள்ளது.

ஆண்டுதோறும் இஸ்லாமிய புனித பண்டிகையான ரம்ஜான் மக்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. ரம்ஜானுக்கு முன்னதாக இஸ்லாமிய மக்கள் நோன்பு இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டு மே 2ம் தேதியில் ரம்ஜான் கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று வளைகுடா நாடுகளில் நோன்பு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ரம்ஜான் நோன்பு நாளை முதல் தொடங்கப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.