1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 27 ஜனவரி 2023 (16:49 IST)

இன்றும் நாளையும் வறண்ட வானிலை, ஆனால்... வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு!

rain
தமிழகத்தில் இன்றும் நாளையும் வறண்ட வானிலை காணப்பட்டாலும் நாளை மறுநாள் முதல் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
வங்க கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் வறண்ட வானிலே காணப்படும் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஜனவரி 29 முதல் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
ஜனவரி 29, 30 மற்றும் 31 ஆகிய மூன்று நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva