தொடர்புடைய செய்திகள்
- சென்னை- நெல்லை வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றி.. பயணிகள் மகிழ்ச்சி
- தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. ஒரே நாளில் ரூ.160 குறைந்தது..!
- ஆட்டோ ஓட்டுனர் வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.9,000 கோடி.. சென்னை டிஎம்பி வங்கியில் பரபரப்பு..!
- தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
- கனமழை எதிரொலி.. ஒரே ஒரு மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!
இன்னும் சிலமணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!
இன்னும் சில மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் இன்னும் சில மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோயம்பத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மழை பெய்யும்
Edited by Mahendran
