வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து சென்னையில் கடந்த 4 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று இரவு முழுவதும் பெய்த கன மழையால் சென்னை நகரம...