தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த முதல்வர்...
- மழைக்காலங்களில் ஏற்படும் சளி பிரச்சனைக்கு இயற்கையான முறையில் தீர்வுகள்
- நவம்பர் 8ம் தேதி வரை விடாது மழை - வானிலை மையம் தகவல்
- மெரினா கடற்கரையில் மழைநீரில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு..
- சென்னையில் மழை வெளுத்து வாங்கும் - நார்வே வானிலை மையம் எச்சரிக்கை
இன்னும் 2 நாட்களுக்கு கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை
வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இலங்கை அருகே வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று தமிழக கடலோரத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் பலத்தை மழை பெய்யும் என சென்னை வானில மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் இன்று காலை தெரிவித்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிகவும் பலத்தை மழை பெய்யும் எனவும் அவர் கூறியுள்ளார்.
வருகிற 8ம் தேதி தமிழகத்தில் மழை இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதில், அடுத்த 2 நாட்களுக்கு கனமழை இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
