1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain again start from December 3 in coastal areas

நாளை முதல் மீண்டும் மழை –வானிலை ஆய்வு மையம் !

வடகிழக்குப் பருவமழை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி சீரான இடைவெளியில் மழை பெய்து வருகிறது. ஒரு வாரமாக மழை இல்லாத நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் நாளை முதல் பரவலாக மழைப் பெய்யும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தாண்டு வடகிழக்குப் பருவமழை தாமதாகவேத் தொடங்கியது. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மிதமான மழைப் பெய்து வருகிறது. சென்ற மாதம் வீசிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்ப்பாமல் தவித்து வருகின்றன.

இதையடுத்து தற்போது மீண்டும் டிசம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் புதுச்சேரி மற்றும் கடலூர் போன்ற கடலோர மாவட்டங்களில் மிதமான அளவிற்கு மழைப் பெய்ய்யும் எனவும். சென்னையில் ஓரிரு இடங்களில் மிகக் குறைந்த அளவில் மழைப் பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
கும்ப்மேளா கொண்டாட்டம் – மக்களுக்குத் திண்டாட்டம்!