1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2019 (11:13 IST)

ஓபிஎஸ் வரட்டும்; அதோட தினகரன் ஆட்டம் க்ளோஸ்... புகழேந்தி ஆன் ஃபயர்!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்கின்ற பெயரில் இயங்கும் கம்பெனி முழுவதுமாக கலைக்கப்படும் என  புகழேந்தி தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
சமீப காலமாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிராக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேசி வந்த செய்திகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தன. மேலும் கடந்த மாதம் முதல்வர் எடப்பாடியின் வீட்டிற்கே சென்று சந்தித்து பேசினார் புகழேந்தி.
 
அப்பொழுதே புகழேந்தி அதிமுகவில் இணையப்போகிறார்? என பல கேள்விகள் எழுந்தன. ஆனால் அது நட்பு ரீதியான சந்திப்பு என புகழேந்தி விளக்கம் அளித்தார். இந்நிலையில் தற்போது வெளிப்படையாகவே, அதிமுகவில் இணையப்போவதாக தெரிவித்துள்ளார். 
இது குறித்தி புகழேந்தி பேசியதாவது, தினகரன் கட்சி துவங்கி 2 வருடங்களாகியும் கட்சி என்கிற அங்கீகாரத்தை பெற முடியாமல் திணறி வருகிறார். நடந்து முடிந்த தேர்தலில் அமமுகவினரை சுயேச்சைகளாக போட்டியிட வைத்து தோல்வியடைய செய்தார்.
 
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்கின்ற பெயரில் இயங்கி வரும் கம்பெனியை முழுவதுமாக கலைக்க வேண்டும். அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ் தமிழகம் திரும்பியதும், நான் அதிமுகவில் இணைவேன் என தெரிவித்துள்ளார்.