தொடர்புடைய செய்திகள்
- உங்கிட்ட பதில் சொல்ல முடியாது! – பெண் காவலரிடம் அதிமுக பிரமுகர் வாக்குவாதம்!
- மே 20 முதல், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: அட்டவணை வெளியீடு...?
- சென்னை என்ன கொரோனா காலத்து சுற்றுலாத்தலமா? ராமதாஸ் கேள்வி!!
- தங்கைக்கு போன் செய்து தாறுமாறாக பேசியவர்! தட்டிக்கேட்ட அண்ணனுக்கு கத்திக் குத்து!
- ’ரூ.30,000 கோடி நிதியுதவி அளிக்க வேண்டும்’ பூபேஷ் பாகல் பிரதமர் மோடிக்கு கடிதம்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வழக்குகள்: திணறும் காவல்!
தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்த 2,71,389 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு காவல்துறை தகவல்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருப்பினும், மக்கள் நோய் தொற்றின் வீரியத்தை புரிந்துக்கொள்ளாமல் வெளியே சுற்றி வருகின்றனர். அப்படி ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 2,71,389 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்படுள்ளனர். இதுவரை 2,27,325 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, 2,55,538 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1.46 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
