தொடர்புடைய செய்திகள்
- ஆபாச யூட்யூபர் மதன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்! – முன்ஜாமீனும் தள்ளுபடி!
- மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்த பப்ஜி மதன்: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
- பப்ஜி மதனுக்கு 2 நாட்கள் காவல்: முக்கிய தகவல் வெளிவருமா?
- மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தோம்.. குவியும் புகார்கள்! – போலீஸார் அதிர்ச்சி!
- பப்ஜி விளையாடாதீர்கள்… மதனின் யு டியூப் பக்கத்தில் அறிவுரை!
மதன் மீது குண்டாஸ் : சட்ட ரீதியாக எதிர்க்கொள்ள மனைவி முடிவு!
எந்த முகாந்திரமும் இல்லாமல் மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மதன் மனைவி கிருத்திகா பேட்டி.
யூடியூபர் மதன் ஓபி சிறுவர் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாகவும் இளம் பெண்களை பாலியல் வன்முறைக்கு தூண்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மதன் தலைமறைவாக இருந்த நிலையில் தர்மபுரியில் போலீசார் அவனை கைது செய்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன் ஜாமீன் கேட்டு பப்ஜி மதன் விண்ணப்பித்திருந்த நிலையில் நீதிமன்றத்தால் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இன்று பப்ஜி மதன் மீது போலீஸார் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அவர் மனைவி கிருத்திகா, பப்ஜி மதன் வீடுகள், கார்கள் போன்ற சொத்து வாங்கி குவிக்கவில்லை. மதனிடம் ஒரே ஒரு ஆடி கார் தான் இருந்தது, அது சொகுசு கார் இல்லை. எந்த முகாந்திரமும் இல்லாமல் மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
