1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Pon Manickavel retired and Statue case judgement tomorrow

ஒரே நாளில் பொன் மாணிக்கவேல் ஓய்வு, சிலைக்கடத்தல் தீர்ப்பு: என்ன ஒரு ஒற்றுமை

statue case
சிலை கடத்தல் குறித்து சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் விசாரணை செய்து வந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு திடீரென மாற்றியது இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது.

இந்த நிலையில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரணை செய்து வந்த ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் நாளைதான்  ஓய்வு பெறுகிறார். இருப்பினும் நாளைய தீர்ப்பில் ஐஜி பொன்.மாணிக்கவேலின் பணிக்காலத்தை நீட்டித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு தமிழக அரசு மாற்றியதை நீதிமன்றம் கண்டித்துள்ளதால் நாளைய தீர்ப்பு தமிழக அரசுக்கு எதிராக வரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஐஜி பொன்மாணிக்கவேலின் பணிக்காலத்தை நீட்டித்து மீண்டும் அவரிடமே விசாரணை செய்யும் அதிகாரத்தை நீதிமன்றம் ஒப்படைத்தால் சிலைக்கடத்தல் வழக்கில் பல பெரிய மனிதர்களின் முகத்திரை கிழியும் என்று கூறப்படுகிறது....!
 
அடுத்த கட்டுரையில்
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளா? தேசிய தேர்வு முகமை முக்கிய அறிவிப்பு