தொடர்புடைய செய்திகள்
- எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் லைட் எரிகிறதா? திமுக, அதிமுக திடீர் போராட்டம்..!
- போன் பண்ணி ஓட்டு கேட்டு, G Payவில் பணம் அனுப்பும் அண்ணாமலை! – திமுகவினர் பரபரப்பு புகார்!
- வியர்வை சிந்தி விதைத்தது அறுவடையாகும் நாள், கவனமாக இருங்கள்: முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!
- இழுபறியில் இருக்கும் 6 தொகுதிகள் எவை எவை? இறுதிக்கட்ட தகவல்..!
- ஈபிஎஸ்க்கு எழுதப்பட்ட போலி அறிக்கை.. விழுப்புரம் டிஎஸ்பியிடம் சி.வி.சண்முகம் புகார்
திமுக நிர்வாகியை தூக்கி வீசிய போலீசார்.. கோவையில் பரபரப்பு..!
கோவையில் திமுக நிர்வாகியை காவல்துறையினர் தூக்கி வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை பாராளுமன்ற தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகின்றனர்
இந்த தொகுதியில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் கோவையில் பூத் ஸ்லிப் வழங்கும் இடத்தில் திமுக நிர்வாகியை போலீசார் தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கோவை பிஎன் புதூர் என்ற பகுதியில் கூட்டம் கூடாதென போலீசார் எச்சரிக்கை செய்தனர். இதனை அடுத்து அங்கு இருந்த நிர்வாகிகளை போலீசார் அப்புறப்படுத்த முயன்றபோது திமுக நிர்வாகி திடீரென மறியல் செய்தார்
இதனை அடுத்து அந்த நிர்வாகியை போலீசார் தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. திமுக நிர்வாகியை தூக்கி வீசிய காவல்துறையினரை கண்டித்து அங்கு திமுகவினர் மீண்டும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் திமுக நிர்வாகியை குண்டு கட்டாக தூக்கி போலீசார் வீசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva
