தொடர்புடைய செய்திகள்
- போன்பே, ஜி பே மூலம் ஓட்டுக்கு பணம் விநியோகம்? – தடை செய்ய கோரி மனு!
- திரையில் தோன்றியே ரசிகர்களை வென்றவர்! – ரஜினிகாந்த்க்கு கமல்ஹாசன் வாழ்த்து!
- கோவையில் பாஜகவினர் தாக்கிய செருப்புக்கடைக்கு சென்ற கமல்: வைரல் புகைப்படம்!
- பாஜகவினர் முஸ்லிம் இளைஞர்களை பார்த்து "பாரத மாதவிற்கு ஜே" கோசம்
- ஆயிரம் விளக்குத்தொகுதியில் குஷ்புவிற்கு அதிகரிக்கும் ஆதரவு!
கோவையில் யோகி ஆதித்யநாத் வருகையில் ரகளை! – பாஜகவினர் மீது வழக்கு!
கோயம்புத்தூரில் நேற்று பிரச்சாரத்திற்காக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்தபோது கடைகளை மூட சொல்லி தகராறு செய்த பாஜகவினர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி போட்டியிடும் நிலையில் பாஜக முக்கிய தலைவர்கள் பலர் தமிழகம் வந்து பல பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று தேர்தல் பரப்புரைக்காக கோவை வந்திருந்தார்.
அப்போது அவர் செல்லும் பாதையில் திறந்திருந்த கடைகளை மூட சொல்லி பாஜகவினர் பிரச்சினை செய்ததுடன், கற்களை வீசி கலவரம் ஏற்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிய நிலையில் இந்த செயலை பல கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினர் மீது பீளமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
