தொடர்புடைய செய்திகள்
- தொடங்குகிறது மீன்பிடி தடைக்காலம்! – படகுகள் திரும்ப அறிவுறுத்தல்!
- ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் , இந்திய பிரதிநிதி யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடர்பாக கருத்து
- பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன நாள் விழா ... பொதுமக்களுக்கு அன்னதானம்
- உலக சாதனை நிகழ்த்திய கரூர் பிரதர்ஸ் ஸ்பீடு ஸ்கேட்டிங் அகடமியின் வீராங்கனைகள்
- அணில்கடித்து மின்கம்பிகள் துண்டாகினவா ? அணில் கடித்து ஆடுகள் இறந்தனவா ? விவசாயிகள் சோகம்
சென்னை அயோத்யா மண்டபம் விவகாரம்; போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது வழக்கு!
சென்னையில் உள்ள அயோத்யா மண்டபத்தை அறநிலையத்துறை நிர்வகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாம்பலம் பகுதியில் உள்ள அயோத்யா மண்டபம் யாருக்கு சொந்தமானது என்ற விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் அயோத்யா மண்டபம் யாருக்கும் சொந்தமானது இல்லை என்றும், மண்டபத்தை அறநிலையத்துறை நிர்வகிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று மண்டப நிர்வாக பணிகளுக்காக சென்ற அறநிலையத்துறை அதிகாரிகளை பாஜகவினர் மற்றும் சிலர் தடுத்து நிறுத்தியதோடு, மண்டபத்தையும் பூட்டி வைத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு எழுந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் பாஜக மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்ட 75 பாஜகவினர் மீது அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
