செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (10:33 IST)

தொடங்குகிறது மீன்பிடி தடைக்காலம்! – படகுகள் திரும்ப அறிவுறுத்தல்!

தொடங்குகிறது மீன்பிடி தடைக்காலம்! – படகுகள் திரும்ப அறிவுறுத்தல்!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்க உள்ளதால் மீனவர்கள் கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்க கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. இந்த காலகட்டத்திற்குள் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவதில்லை.

இந்த ஆண்டிற்கான மீன்பிடி தடைக்காலம் வரும் வெள்ளியன்று தொடங்க உள்ள நிலையில் அனைத்து விசைப்படகுகளும் 14ம் தேதி இரவுக்குள் கரை திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.