தொடர்புடைய செய்திகள்
- இன்று எம்.ஜி.ஆர் பிறந்தநாள்: தமிழக அரசு கொண்டாட முடிவு!
- சென்னையில் மட்டும் 9000: இன்றைய தமிழக கொரோனா நிலவரம்!
- 10,11,12ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள்! – பள்ளிக்கல்வித்துறை தகவல்!
- தடுப்பூசி இயக்கம் தொடங்கி ஓராண்டு நிறைவு! – பிரதமர் மோடி நன்றி!
- 10,11,12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை! – தமிழக அரசு அறிவிப்பு!
சமூக நீதியின் சிறந்த தலைவர் எம்ஜிஆர்! – பிரதமர் மோடி புகழாரம்!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளான இன்று அவர் குறித்து பிரதமர் மோடி புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
அதிமுக கட்சியை தொடங்கியவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் எம்ஜிஆர் குறித்து தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன. அவரது திரையுலக பெருந்திறனும் அனைவராலும் போற்றப்படுகிறது!” என்று கூறியுள்ளார்.
பாரத ரத்னா எம்.ஜி.ஆரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். சமூகநீதி, அதிகாரமளித்தல் ஆகியவற்றில் முதன்மையான சிறந்த தலைவராக அவர் பரவலாகப் போற்றப்படுகிறார். அவரது திட்டங்கள் ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்தன.
— Narendra Modi (@narendramodi) January 17, 2022
அடுத்த கட்டுரையில்
