1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. piyush goyal talk with admk allinace parties today

சென்னையில் பியூஸ் கோயல்!.. அதிமுக - பாஜக தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படுமா?...

eps
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. கிட்டத்தட்ட தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளான அதிமுக, திமுக இரண்டுமே தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை பேசி முடிக்கவில்லை. திமுகவில் சில கட்சிகளுக்கு தொகுத்து பங்கீடு முடிந்து விட்டாலும் தேமுதிக, விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து உடன்பாடு ஏற்படவில்லை..

ஒருபக்கம் அதிமுக இன்னமும் தொகுதி பங்கீடு பற்றிய பேச்சு வார்த்தை அதிகாரப்பூர்வமாக துவங்கப்படவில்லை. ஏற்கனவே இது பற்றி சில முறை பேசினாலும் உடன்பாடு ஏற்படவில்லை. ஏனெனில் பாஜக 30க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்கிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி, அன்புமணி, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக டெல்லி சென்று அமிஷாவை நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு பற்றி பேசினார்கள்..

இந்நியில்தான் பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஸ் கோயல் இன்று காலை சென்னை வந்திருக்கிறார்.. நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அநேகமாக எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதி என்கிற பங்கீடு விவரங்கள் பேசி முடிக்கப்பட்டு இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இரட்டை இலை வேண்டா!ம்.. தாமரை சின்னத்தில் போட்டியிடுங்க!.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த அமித்ஷா..