1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. People urged in Chennai kasimedu

நாளை முழு ஊரடங்கு… இன்றே காசிமேட்டில் கூடிய கூட்டம்!

காசிமேடு
கொரோனா உருமாறிய வைரஸான ஒமிக்ரான் பரவல் அதிகமாகியுள்ளதால் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வார நாட்களில் இரவு ஊரடங்கும், வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கும் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமைகளில் பெருவாரியான மக்களின் விருப்ப உணவாக மீன் உள்ளிட்ட இறைச்சி உணவுகள் உள்ளன.
நாளை முழு ஊரடங்கு என்பதால் இன்று சனிக்கிழமையே சென்னை காசிமேடு உள்ளிட்ட மின் பிடி தளங்களில் மக்களின் வருகை வழக்கத்தை விட அதிகமாகியுள்ளது.