தொடர்புடைய செய்திகள்
- அதுக்குள்ள டாஸ்மாக் திறக்க என்ன அவசரம்? – டிடிவி கண்டனம்!
- சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறப்பது தவறான முடிவு: ரவிகுமார் எம்பி
- ஆகஸ்ட் 18 முதல் சென்னையில் டாஸ்மாக் திறப்பு: ஆனால் சில நிபந்தனைகள்!
- கமலா ஹாரிஸ்: மெட்ராஸ் இட்லியும், கடற்கரையில் தாத்தாவுடன் நடைப்பயிற்சியும் - அமெரிக்க துணை அதிபர் வேட்பாளரின் சென்னை நாட்கள்
- தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா உயிரிழப்பு: அதிர்ச்சியில் தமிழக மக்கள்
சென்னையை மொய்க்கும் வெளியூர் ஆட்கள்: பரனூரில் நெரிசல்!!
இ-பாஸ் தளர்வுகள் சென்னையின் நுழைவு வாயிலான பரனூரில் கூட்ட நெரிசலாக உள்ளதாக தகவல்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபாஸ் நடைமுறை அமலில் இருந்த நிலையில் இன்று முதல் இபாஸ் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று அதிகாலை முதல் இபாஸ் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவின்பேரில் இபாஸ் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் இன்று அதிகாலை முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல உடனடியாக அனுமதி கிடைக்க தொடங்கியுள்ளது.
அமலுக்கு வந்த இ-பாஸ் தளர்வுகள் சென்னையின் நுழைவு வாயிலான பரனூரில் கூட்ட நெரிசலாக உள்ளது. வாகனங்களில் சென்னைக்கு வரும் மற்றும் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
