1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Orange alert to kerala

கேரளாவிலும் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கேரளா
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது என்பதும் தற்போது கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தமிழகத்தை போலவே தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவிலும் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் எர்ணாகுளம் திருச்சூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளதாகவும் அடுத்த 3 நாட்களுக்கு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
 
மேலும் கேரளாவில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
முன்ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார் முன்னாள் அமைச்சர் சரோஜா!