1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 1 ஆகஸ்ட் 2022 (19:35 IST)

ஓ.பி.ரவீந்திரநாத் சுயேச்சை எம்.பி போலத்தான் செயல்பட்டார்: ராஜன் செல்லப்பா

ravindranath
அதிமுக ஒன்றாக இருந்த காலத்திலேயே ரவீந்திரநாத் எம்பி சுயச்சை எம்பி போல்தான் செயல்பட்டார் என அதிமுகவின் மூத்த தலைவர் ராஜன் செல்லப்பா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.  இதனை அடுத்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரை சார்ந்தவர்கள் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
 
மேலும் அதிமுகவின் ஒரே எம்பியான ரவீந்திரநாத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
இந்த நிலையில் இதுகுறித்து ராஜன் செல்லப்பா அவர்கள் பேட்டி அளித்த போது அதிமுக எம்பி ஆக இருந்த காலத்திலேயே ரவீந்திரநாத் சுயேட்சை எம்பொ போல் தான் செயல்பட்டார் என்றும் என்றைக்குமே அவர் அதிமுக கொள்கைக்காக பாராளுமன்றத்தில் கொடுத்ததே இல்லை என்றும் தெரிவித்துள்ளார் அவரது இந்த பேட்டி பெரும் பரபரப்புக்கு.