தொடர்புடைய செய்திகள்
- மாணவனை வகுப்பறையில் மசாஜ் செய்ய வைத்த ஆசிரியை சஸ்பெண்ட்!
- மாநிலங்களவையில் மேலும் 3 எம்பிக்கள் சஸ்பெண்ட்: மொத்தம் 23 எம்பிக்கள் சஸ்பெண்ட்!
- 23 எம்பிக்கள் சஸ்பெண்ட்: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை!
- மேலும் 8 எம்பிக்கள் சஸ்பெண்ட்: மொத்தம் 19 எம்பிக்கள் சஸ்பெண்ட் ஆனதால் பரபரப்பு
- எம்.பி.க்கள் சஸ்பெண்ட் - தயாநிதி மாறன் எம்.பி. கண்டனம்!
ஜோதிமணி உள்பட 4 எம்பிக்கள் சஸ்பெண்ட் ரத்து!
பாராளுமன்றத்தில் அமளி செய்ததால் மொத்தம் இருபத்தி மூன்று எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் ஜோதிமணி உள்பட 4 எம்பிக்களின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்படுவதாக மக்களவை தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க் கட்சிகள் பாராளுமன்றத்தில் அமளி செய்து வருவதால் 23 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இவர்களில் திமுக எம்பிக்கள் மற்றும் ஜோதிமணி உள்பட காங்கிரஸ் எம்பிக்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த நிலைஇல் ஜோதி மணி மாணிக்கம் தாகூர் உள்பட 4 காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட் ரத்து செய்யப்படுவதாக மக்களவை தலைவர் தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து இந்த நான்கு எம்பிக்களும் இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
