1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 28 டிசம்பர் 2022 (17:52 IST)

ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒரு உயிர் பலி: ரூ.50 ஆயிரம் இழந்த வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை...!

rummy
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பலர் லட்சக்கணக்கில் இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஆன்லைன் ரம்மி விளையாடி 50 ஆயிரம் ரூபாய் இழந்த வாலிபர் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர் செல்போன் மூலம் ஆன்லைனில் சூதாட்டத்தில் ஈடுபட்டு 50 ஆயிரம் வரை இழந்துள்ளார்.
 
இதனையடுத்து அவரது தாய் மற்றும் உறவினர்கள் அவரது திட்டியதால் மனமுடைந்த அவர் திடீரென மாயமானார். இதனையடுத்து அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது
 
இந்த புகாரின் அடிப்படையில் அவரை தேடி வந்த நிலையில் அதே பகுதியில் உள்ள கிணற்றில் அருண் குமாரின் உடல் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் 24 வயது வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மற்றும் கொள்ளை
 
Edited by Mahendran