1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. One more person arrested in Group 2 case

குரூப் 2 முறைக்கேடு; மேலும் ஒருவர் கைது

தமிழகம்
கோப்புப்படம்

குரூப் 2 முறைக்கேட்டில் மேலும் ஒரு கைது செய்யப்பட்டுள்ளார்.

குரூப் 2 ஏ தேர்வு முறைக்கேடு தொடர்பாக தீபக், வினோத் குமார், அருண்பாலாஜி, தேவி உட்பட இதுவரை 14 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இவர்களிடம் நடத்திய விசாரணையில் தேர்வில் வெற்றி பெற ரூ.8 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை லஞ்சம் கொடுத்துள்ளதாக தெரியவந்தது.

இந்நிலையில் குரூப் 2 ஏ முறைக்கேட்டில் கார்த்திக் என்பவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளது. இவர் எழிலகத்தில் வணிகத்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிபவர் என தெரியவருகிறது.
அடுத்த கட்டுரையில்
கே.என்.நேரு, வீரபாண்டி ராஜாவை அடுத்து குறி வைக்கப்பட்ட திருச்சி சிவா: முக ஸ்டாலின் அதிரடி