தொடர்புடைய செய்திகள்
- ''பஞ்சாபி பாடகர் கொல்லப்பட்டது போல் நீயும் , சல்மான் கானும் கொல்லப்படுவீர்கள்''- எம்பிக்கு வந்த கொலைமிரட்டல்!
- ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடியில் பிரபல நடிகர்-தயாரிப்பாளருக்கு தொடர்பா?
- எம்.பி. பதவி இழப்புக்குப் பின் ராகுல் காந்தி பங்கேற்கும் முதல் கூட்டம்: எங்கே தெரியுமா?
- ஆருத்ரா கோல்டு மோசடி - நடிகர் ஆர்.கே.சுரேஷ் திடீர் தலைமறைவு!
- கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர்.. அசால்டாக கலக்கும் இளம் பெண்.
சென்னை ஓஎம்ஆர் - இசிஆர் சாலைகளை இணைக்க ஆய்வு: நெடுஞ்சாலைத் துறை தகவல்..!
சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் ஆகிய 2 சாலைகள் என்பதும் இந்த இரண்டு சாலைகளுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த இரண்டு சாலைகளையும் பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து இணைக்கும் வகையில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.
முதல் கட்டமாக ஓஎம்ஆர் ஈசிஆர் சாலைகளை நீலாங்கரையில் இணைக்கும் பணி ரூபாய் 18 கோடியில் முடிக்கப்பட்டு இருப்பதாகவும் பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து ஓஎம்ஆர் - இசிஆர் சாலையை இணைப்பதற்கு ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் மூலம் பக்கிங்காம் கால்வாய் குறுக்கே மேம்பாலம் அமைக்க விரிவான திட்டம் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் இந்த மேம்பாலம் தயாரானால் இரு சாலைகளும் இணைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Edited by Mahendran
