1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (09:22 IST)

பொங்கல் வரை உஷாரா இருங்க... சுகாதாரத்துறை எச்சரிக்கை

பொதுமக்கள் பொங்கல் பண்டிகை வரை முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு பின்னர் தளர்வுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.   
 
இந்நிலையில் அடுத்து திபாவளி, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ளது. இதனால் சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள் இது குறித்து தெரிவித்துள்ளதாவது, கொரோனா வைரஸ் நிழல் போல் பின்தொடர்வதால் பொதுமக்கள் பொங்கல் பண்டிகை வரை முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 
 
தற்போது பண்டிகை காலமாக இருப்பதால் பொது இடங்களில் மக்கள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது நாளுக்குநாள் குறைந்து வருகிறது. முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளிகளை பின்பற்றுவது என்பது அரிதாகிவிட்டது. எனவே மக்கள் அதிகவனத்துடன் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.