தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தை வாட்ட காத்திருக்கும் கோடை! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
- மூன்றாவது முறையாக கொளத்தூரில் களம் இறங்கும் ஸ்டாலின் – விருப்ப மனு தாக்கல்
- ஏடிஎம் கொள்ளை முயற்சி; உடைக்க முடியாததால் தூக்கி சென்ற கொள்ளையர்கள்!
- வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு! – ஆளுனர் உடனடி ஒப்புதல்!
- மதிமுக, விசிக-வுக்கு திமுக அழைப்பு! – கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பம்!
வந்தான் ஒருவன் வந்தான்! – தேர்தலுக்காக ட்ரெண்ட் செய்யும் தம்பிகள்!
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியினர் #வந்தான்_ஒருவன்_வந்தான் என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியுள்ளன. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே 36 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விருப்பமனு முறையில்லாமல் நேரடியாக அறிவித்தார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இந்நிலையில் சமீபத்தில் கட்சிக்குள் நடந்த உள்பூசல் காரணமாக கல்யாணசுந்தரம், ராஜீவ்காந்தி மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதனால் நாதக தேர்தலில் பின்னடைவை சந்திக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில், நாம் தமிழர் கட்சியினர் #வந்தான்_ஒருவன்_வந்தான் என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதன்மூலமாக சீமான் கட்சி அரசியல் முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
