தொடர்புடைய செய்திகள்
- பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு: சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
- ஒரு பக்கம் ரெட் அலெர்ட்.. மறுபக்கம் பூண்டி ஏரி திறப்பு! - தாக்குப்பிடிக்குமா சென்னை?
- அதிகரிக்கும் மழை; சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - வானிலை அப்டேட்ஸ்!
- உயர்ந்து கொண்டே வந்த தங்கம், வெள்ளி விலை.. இன்றைய சென்னை நிலவரம் என்ன?
- காற்றழுத்த தாழ்வால் சென்னையில் மழை எப்படி இருக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!
சென்னைக்கு இதுதான் கடைசி மழையாக இருக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்..!
சென்னையில் தற்போது பெய்து வரும் மழை தான் வடகிழக்கு பருவ மழையின் கடைசி மழையாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கணித்துள்ளார்.
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
மேலும், அடுத்த சில மணி நேரத்தில் 33 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதளப் பதிவில் சென்னையில் தற்போது பெய்து வரும் கனமழை படிப்படியாக குறைந்து விடும் என்றும் அனேகமாக வடகிழக்கு பருவமழையின் கடைசி மழையாக சென்னைக்கு இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும், மழை படிப்படியாக குறைந்து முழுமையாக இன்னும் சில நாட்களில் நின்று விடும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
