ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (19:53 IST)

பேருந்து நிலைய ஊழியரை தாக்கி பணம் பறித்த வட மாநில இளைஞர்கள்

karur
கரூர் மாநகரில் பேருந்து  நிலையத்தில் டைம் கேன்வாசராக புலியூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் செல்வராஜ் பணியாற்றி வருகிறார்.
 

இவர், நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி செல்லும் பேருந்தின் இருக்கையில் இடம் பிடித்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த வடமாநில இளைஞர்கள் சிலர் அவரிடம் அந்த இடத்தில் அமருவோம் என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதனால் இவர்களுக்கு இடையே, வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது.    அப்போது செல்வராஜ் கூச்சல் போட்டார்.

மேலும், சிலர் இளைஞர்கள் அவரைத் தாக்கி அவரது சட்டையை கிழித்து, அவரின் சட்டையை  கிழித்து, அவரிடம் இருந்து பணத்தைப் பறித்துக் கொண்டனர்.

இதுபற்றி, பொதுமக்களும் செல்ராஜும் போலீஸில் புகாரளித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.                                                                                                                          
சமீபத்தில், சூலூரிலும், திருப்பூரிலும் வட மாநில இளைஞர்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.