1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 13 அக்டோபர் 2021 (15:01 IST)

வரும் ஞாயிறு மெகா தடுப்பூசி முகாம் ரத்து!

ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
தமிழகம் முழுவதும் கொரொனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 5 வாரங்களாக தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு மக்கள் பலருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 4 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்தப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
ஆம், பண்டிகைக் காலம் என்பதால் வரும் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.