1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Nivar cyclone would be strong at next day

அதிதீவிர புயலாக மாறுகிறது நிவர்! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Tamilnadu
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிதீவிர புயலாக நிவர் மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் அருகே வங்கக்கடலின் தெற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியுள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறி நாளை பிற்பகல் மாமல்லப்புரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது வங்க கடலில் நிலை கொண்டுள்ள நிவர் வலுவடைந்துள்ளதால் தீவிர புயலில் இருந்து அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும்போது 120 முதல் 145 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், சுற்றுவட்டார மாவட்டங்களில் 100 முதல் 120 கி.மீ வரை காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
கடிக்க வந்த பாம்பின் கழுத்தைப் பிடித்த நபர்…வைரலாகும் வீடியோ