தொடர்புடைய செய்திகள்
- இனி ஏ பி சி என செண்டர்கள் எல்லாம் கிடையாது… சிம்பு கருத்து!
- பசு தலையை வீசியதாக குற்றச்சாட்டு! – இஸ்லாமியர்களை துன்புறுத்திய காவலர்கள் மீது நடவடிக்கை!
- தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு..! – பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதரவு!
- இயக்குனர் ராம் இயக்கத்தில் சிம்பு… விரைவில் தொடங்கும் புதிய படம்!
- இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் மூவி… ராம் கோபால் வர்மாவின் அடுத்த ரிலீஸ்!
ஒரே விடுதியை சேர்ந்த 21 பள்ளி மாணவிகளுக்கு கொரோனா! – நீலகிரியில் அதிர்ச்சி!
நீலகிரியில் ஒரே விடுதியை சேர்ந்த 21 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் நிலையில் தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சுற்றுலா தளங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை நீலகிரியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நீலகிரியில் உள்ள தன்னார்வல தொண்டு நிறுவனத்தின் விடுதியில் தங்கி படித்து வந்த பள்ளி மாணவிகளுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களை சோதித்ததில் 21 மாணவிகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் ஒரு ஊழியருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நிலையில் விடுதியில் உள்ள மற்ற மாணவிகள், ஊழியர்களுக்கும் பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரே விடுதியை சேர்ந்த மாணவிகள் 21 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
